பெண் பணியாளர் மீது கொடூர தாக்குதல்..; நிறுவனத்தின் உரிமையாளர் அதிரடியாக கைது....!

 திருப்பத்தூர் அருகே பெண் பணியாளர் மீது கொடூர தாக்குதல்..; நிறுவனத்தின் உரிமையாளர் அதிரடியாக கைது....! 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தராபள்ளி பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் ( 32 ).இவர் பாலாஜி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வைத்து வெளிநாட்டுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் வேலூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் கடந்த நான்கு ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் வெங்கடேசனின் மகள் மீது கோபாலகிருஷ்ணனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் தன்னுடைய பெற்றோர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். அதற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு அவருடைய பெற்றோர்கள் வேறொரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.இந்த நிலையில் வேலூரில் இருந்து அந்தப் பெண் தொடர்ந்து பணிக்கு வந்த நிலையில் நேற்று கோபாலகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மற்றும் அவருடைய தந்தை வெங்கடேசன் ஆகியோர் இது குறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

                                  

                                           இணை ஆசிரியர்;பரிமளம் .

 தென்னிலை கதிர் மாதம்இரு முறைRNI/TNTAM/2022/85265

 
செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் -thennilaikathir@gmai

                                                    9445272820,7904654776,98847993      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சென்னையில் 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்...!

தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்த நிருபர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா கண்டனம்.

தென்னிலை கதிர் செய்தியால் மாதமாதம் மாமூல் போச்சேன்னு புகார் கொடுத்த ஊத்தங்கரை நிருபர்கள்....?