இடுகைகள்

50 பேரின் பெயரை உடனே சொல்லனும் இல்லன்னா நடிகர் விஜயை சவுக்கால் அடிப்பேன்....!திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு...!!அதிர்ச்சியில் தவெகவினர்....!!!

படம்

பாமக இளைஞர் அணி துணைச் செயலாளர் R. அசோகன் திடீர் விலகல்...!

படம்
  பாமகவுக்கு ஷாக்...! இளைஞர் அணி துணைச் செயலாளர் R. அசோகன் திடீர் விலகல்...! திமுகவில் 50-க்கும் மேற்பட்டோருடன் ஐக்கியம்....!!! பாமக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே தன்னுடைய மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றசாட்டுகளை முன்வைத்ததோடு அவர் தன்னுடைய தாயை கூட அடிக்க துணிந்தவர் என்று கூறியுள்ளார் . நேற்று(05-06-2025) அன்புமணி மற்றும் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது . இதற்கிடையில் பாமக கட்சியின் தலைவர் நான் தான் என ராமதாஸ் கூறும் நிலையில் அன்புமணியோ நான்தான் கட்சியின் தலைவர் என்கிறார். இதன் காரணமாக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பாமக கட்சியின் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆர் அசோகன் திடீரென பாமக கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் பர்கூர் திமுக எம்எல்ஏ மதியழகன் தலைமையில் திமுகவில் தற்போது இணைந்தார். அதோடு 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். வருக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் த...

குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு..? இரவு 11 மணிக்கு டேங்க் மீது 2 பேர்.....!

படம்
  திருப்பூரில் அடுத்த அதிர்ச்சி..! குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு..? இரவு 11 மணிக்கு டேங்க் மீது 2 பேர்.....! திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு கவுண்டநாயக்கன்பாளையத்தில் 17.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக வந்த தகவலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவியதால், ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டனர்.. இதையடுத்து, அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள் . திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு கவுண்டன்நாயக்கன்பாளையம் பகுதியில், 17 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 அடி உயர குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. இங்கு 2 காவலாளிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.. திருப்பூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் இந்த குடிதொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு தொட்டியின் உச்சியில் சிலர் உட்கார்ந்திருந்தனர்.. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்களில் சிலர், தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்ப...

சென்னையில் 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்...!

படம்
  சென்னையில் 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்...! சென்னையில் உள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் பதறிப்போன பெற்றோர், சிறுமியை கண்டறிந்து தரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரை ஏற்ற காவல்துறையினர், சிறுமி மாயமானது குறித்து விசாரித்து அவரை மீட்டனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சிறுமியின் 16 வயது ஆண் நண்பர், ஆண் நண்பரின் தாய் என 2 பேர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் உதவி மையத்தில் வைத்து சீண்டல் இதனிடையே, சிறுமி அளித்த அதிர்ச்சி தகவல் ஒன்று அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தந்தது. அதாவது, 13 வயது சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி, பட்டினப்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நள்ளிரவு நேரத்தில், காவல் வாகனம் ஒன்று இருந்தது. அங்கிருந்த அதிகாரியிடம் வீட்டிற்கு செல்ல உதவி கேட்டுள்ளார்.அப்போது, பணியில் இருந்த காவல் வாகன ஓட்டுநரான காவலர் ராமன், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து அவரை பட்டினப்பாக்கம் காவல் உதவி மை...

ஆண்டாள் கோவிலில் அவமதிப்பு...!!

படம்
  ஆண்டாள் கோவிலில் அவமதிப்பு; தீண்டாமை கொடுமையால் வெளியேற்றப்பட்ட இளையராஜா....! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வெளியிட்ட ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு 15ஆம் தேதி மாலை நாட்டியாஞ்சலி நடைபெற்றது. ராமானுஜ ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளையராஜா சென்றிருந்தார். சிறப்பாக வரவேற்று, மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி, இளையராஜாவுக்கு தடபுடலாக மரியாதை செய்தனர். நிகழ்ச்சி மேடையில் இளையராஜா ஏறியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. எல்லாம் சரியாக நடந்த நிலையில், ஆன்மிகச் சிலிர்ப்பு மேலிட, ஜீயர்கள் மற்றும் அய்யங்கார்களுடன் ஆண்டாள் கோவிலுக்குள் இளையராஜா சென்றார். அப்போது கருவறை என்று சொல்லப்படும் மூலஸ்தானத்துக்கு முன்பாக உள்ள அர்த்தமண்டபத்துக்குள் அவர்களுடன் சென்றுவிட்டார். ஆனால் உடனே அவர் தடுக்கப்பட்டு அர்த்தமண்டபத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். வாடிய முகத்துடன் அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறிய இளையராஜா, பக்தர்களுடன் பக்தர்களாக வாசலில் இன்று வணங்கினார். இந்தியாவில் விவிஐபியாக இருந்தாலும், அர்த்தமண்டபம் வரை செல்வதற்கு வர்ண...